உள்ளூர் செய்திகள்
பராமரிக்கப்பட்ட சாலை தடுப்பு வளைவு

மாலைமலர் செய்தி எதிரொலி பராமரிக்கப்பட்ட சாலை தடுப்பு வளைவு

Published On 2022-04-18 11:03 GMT   |   Update On 2022-04-18 11:03 GMT
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக தடுப்பு வளைவை பராமரிக்க உத்தரவிட்டனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பகுதியில் நால் ரோடு சந்திப்பு உள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள பகுதி என்பதால் வாகனங்கள் தாறுமாறாக சென்று வருகின்றன. இதனையடுத்து ரோட்டின் நடுவே தடுப்பு வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் கட்டப்பட்டு இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் சரிவர சுற்று சுவர்களுக்கு தண்ணீர் ஊற்றாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதுகுறித்து “மாலைமலர்” நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. 

இதையறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக தடுப்பு வளைவை பராமரிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து சாலை தடுப்பு  வளைவுக்கு சாக்குகள் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டது.
Tags:    

Similar News