உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்ட அந்தோணி பனி சிமிலன், ரஞ்சித் குமார்.

ஓட்டப்பிடாரம் அருகே தனியார் நிறுவனத்தில் இரும்பு பொருட்கள் திருட்டு-2 பேர் கைது

Published On 2022-04-13 09:28 GMT   |   Update On 2022-04-13 09:28 GMT
ஓட்டப்பிடாரம் அருகே தனியார் நிறுவனத்தில் இரும்பு பொருட்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதியம்புத்தூர்:

ஓட்டப்பிடாரம் அருகே கீழ வேலாயுதபுரத்தில் ஒரு தனியார் நிறுவனம் 
செயல்பட்டு வந்தது.  தற்போது அது இயங்கவில்லை. இதையடுத்து 
அந்நிறுவனத்தில் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு 
வருகின்றனர்.  இன்று காலை அங்கு ஏதோ சத்தம் கேட்டு  காவலர்கள் 
பார்த்த போது அங்கு சிலர் இரும்பு பொருட்களை திருடிக் கொண்டிருந்தது 
தெரியவந்தது. 

அவர்களை காவலாளிகள் விரட்டிச் சென்றபோது காம்பவுண்ட் சுவற்றிற்கு 
வெளியே தயாராக நின்றிருந்த மினிவேனில் இரும்பு பொருட்களை ஏற்றிக் 
கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக   நிறுவனத்தின் என்ஜினீயர் 
சாந்தகுமார் புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.  
விசாரணையில் கீழவேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த   மகேஷ் கார்த்திக், 
 வேல்முருகன் மற்றும் தூத்துக்குடி   அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த 
அந்தோணி பனி சிமிலன்,  ரஞ்சித்குமார் ஆகியோர் திருடியது 
தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அந்தோணி பனி சிமிலன், ரஞ்சித் குமார் 
ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து   இரும்பு பொருட்களையும், 
திருட்டிற்கு பயன்படுத்திய மினிவேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் 
தப்பி ஓடிய மகேஷ் கார்த்திக், வேல்முருகன் ஆகியோரை வலைவீசி தேடி 
வருகின்றனர். 
Tags:    

Similar News