உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் பள்ளி மாணவன் தற்கொலை

Published On 2022-04-12 10:37 GMT   |   Update On 2022-04-12 10:37 GMT
ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு வடபுதூர் கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கிட்டம்மாள். இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

இவர்களில் கடைசி மகன் அர்ச்சுனன் (வயது 11). இவர் சிக்கனாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி முடிந்து வந்ததும் அர்ச்சுனனும், அவரது சகோதரரும் இணைந்து செல்போனில் ஆன்லைன் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பெற்றோர், அவர்களிடம் இருந்து செல்போனை பிடுங்கி யாரும் ஆன்லைன் விளையாட்டு விளையாடக் கூடாது என கண்டித்தனர்.

இதனால் அர்ச்சுனன் மன வேதனை அடைந்து வீட்டில் உள்ள ஜன்னலில் கயிற்றை கட்டி தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கயிற்றை அவிழ்த்து அர்ச்சுனனை மீட்டனர். பின்னர் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News