உள்ளூர் செய்திகள்
வியாபாரி சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது
தட்டார்மடத்தில் வியாபாரி சங்கத்தலைவருக்கு கொலை மிரட்டல்விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் பஸ் நிலையம் பின்புறம் சுமார் 2 வருடகாலமாக பழமையான பச்சை மரம் ஒன்று உள்ளது.
சம்பவத்தன்று தட்டார்மடத்தை சேர்ந்த சண்முகநாதன், அரவான் நகரை சேர்ந்த இசக்கிமுத்து, பென்சீன் ஆகியோர் இந்த மரத்தை வெட்டி உள்ளனர்.
இந்த மரம் அருகே தட்டார்மடம் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதிதாக நடப்பட்ட மரத்தையும், இவர்கள் வெட்டி உள்ளனர்.
இதனை பார்த்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜ் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக அவர் போலீசில் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சண்முகநாதன், இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தார்.
பொன்சிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் பஸ் நிலையம் பின்புறம் சுமார் 2 வருடகாலமாக பழமையான பச்சை மரம் ஒன்று உள்ளது.
சம்பவத்தன்று தட்டார்மடத்தை சேர்ந்த சண்முகநாதன், அரவான் நகரை சேர்ந்த இசக்கிமுத்து, பென்சீன் ஆகியோர் இந்த மரத்தை வெட்டி உள்ளனர்.
இந்த மரம் அருகே தட்டார்மடம் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதிதாக நடப்பட்ட மரத்தையும், இவர்கள் வெட்டி உள்ளனர்.
இதனை பார்த்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜ் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக அவர் போலீசில் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சண்முகநாதன், இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தார்.
பொன்சிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.