உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாளை அருகே தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2022-04-06 10:37 GMT   |   Update On 2022-04-06 10:37 GMT
பாளை அருகே தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி பலியானார்.
நெல்லை:

பாளை அருகே உள்ள கொங்கந்தான்பாறை  மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜசெல்வகுமார் (வயது52). இவர் கொங்கந்தான்பாறை பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டில்  உள்ள மோட்டாரை போடுவதற்கு சுவிட்சை அழுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜசெல்வகுமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.  

இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜசெல்வகுமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News