உள்ளூர் செய்திகள்
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளை யத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
இந்த கொலை வழக்கில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தலைமறைவாக இருந்த ரவுடி சாணக்கியா (வயது 35) என்பவர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.