உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-04-05 09:10 GMT   |   Update On 2022-04-05 09:10 GMT
தஞ்சையில் கடை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
தஞ்சாவூர்:

தஞ்சை கீழவாசல் குறிச்சி சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர்  காளிதாஸ் (வயது 53).

இவர் தஞ்சை தெற்கு அலங்கம் பகுதியில் ஒரு கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.

ஆனால் சாவியை எடுக்க மறந்து விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும்  கிடைக்கவில்லை.

இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சிறப்பு சப்-&இன்ஸ்பெக்டர் பழனியாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News