உள்ளூர் செய்திகள்
போதை பொருட்களின் தீமைகள் குறித்து போலீசார் நோட்டீஸ் வினியோகம்
போதை பொருட்களின் தீமைகள் குறித்து போலீசார் துண்டுபிரசுரம் வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாமக்கல்:
கஞ்சா, குட்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து நாமக்கல் பஸ்நிலையத்தில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.
அப்போது அவர்கள் கஞ்சா மற்றும் குட்கா சாப்பிடுவதால், ஆண்மை குறைபாடு, பார்வை குறைபாடு ஏற்படும். மூளை செயல்பாடு குறையும். மனநலம் பாதிக்கும். நினைவாற்றல் பாதிக்கும். இது ஒருவகையான போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும்என அறிவுரை வழங்கினர்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.