உள்ளூர் செய்திகள்
அரிவாள் வெட்டு

மனைவியை தவறாக பேசிய நண்பனுக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-03-28 08:40 GMT   |   Update On 2022-03-28 08:40 GMT
மனைவியை தவறாக பேசிய நண்பனுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர்:

அம்பத்தூர் பானு நகரை சேர்ந்த பிரிதிவிராஜும் கொரட்டூர் காமராஜர் தெருவை சேர்ந்த இம்மானு வேல் ராஜ், மணிகண்டன் ஆகியோரும் நண்பர்கள்.

இவர்கள் நேற்று மாலை அம்பத்தூர் பானு நகர் சுடுகாட்டில் மது அருந்திக் கொண்டிருந்த போது நண்பன் பிரித்திவிராஜ், இமானுவேல்ராஜின் மனைவியைப் பற்றி தவறாக பேசி உள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த இம்மானுவேல்ராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரித்விராஜை சரமாரியாக வெட்டியதால் தலை, மூக்கு,வாய்,வயிறு உள்ளிட்ட 10 இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த பிரித்விராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இமானுவேல்ராஜ், அவரது நண்பன் மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News