உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மனைவி திட்டியதால் தொழிலாளி தற்கொலை

Published On 2022-03-27 09:08 GMT   |   Update On 2022-03-27 09:08 GMT
செங்கோட்டையை அடுத்த புளியரையில் மது குடித்துவிட்டு வந்த கணவரை மனைவி திட்டியதால், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கோட்டை:

செங்கோட்டையை அடுத்த புளியரை கோட்டைத்தெருவை சேர்ந்தவர் மாரி செல்வம்(வயது 32). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு தீபிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மாரிசெல்வத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

இதனை தீபிகா கண்டித்துள்ளார். நேற்றும் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த அவரை, தீபிகா சத்தம் போட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த மாரிசெல்வம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று அதிகாலை இதனை கண்ட தீபிகா கத்தி கூச்சலிட்டார். தகவல் அறிந்த புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி அங்கு விரைந்து சென்று மாரிசெல்வம் உடலை மீட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News