உள்ளூர் செய்திகள்
மழைக்கு வாய்ப்பு உள்ள பகுதிகள்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2022-03-25 11:18 GMT   |   Update On 2022-03-25 11:18 GMT
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை:

தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்ப உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News