உள்ளூர் செய்திகள்
லேப் டெக்னீசியன் படித்து வந்த நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வந்த மாணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் புதியவன். விவசாயி. இவரது மகன் முத்துக்குமார் (வயது 21).
இவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் படித்து வந்தார்.
கடந்த 9-ந் தேதி வீட்டிலிருந்த முத்துக்குமார் விஷத்தை குடித்துள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம் விஷத்தை குடித்த விபரத்தை கூறி கூறியுள்ளார்.
அவர்கள் முத்துக்குமாரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் புதியவன். விவசாயி. இவரது மகன் முத்துக்குமார் (வயது 21).
இவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் படித்து வந்தார்.
கடந்த 9-ந் தேதி வீட்டிலிருந்த முத்துக்குமார் விஷத்தை குடித்துள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம் விஷத்தை குடித்த விபரத்தை கூறி கூறியுள்ளார்.
அவர்கள் முத்துக்குமாரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.