உள்ளூர் செய்திகள்
விஜய் வசந்த்

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி- விஜய் வசந்த்

Published On 2022-03-05 09:22 GMT   |   Update On 2022-03-05 09:22 GMT
குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News