உள்ளூர் செய்திகள்
தினேஷ்குமார்

திருப்பூர் மாநகராட்சியை முன்னோடி மாநகராக மாற்றுவேன் - மேயர் தினேஷ்குமார் பேட்டி

Published On 2022-03-04 11:03 GMT   |   Update On 2022-03-04 11:03 GMT
கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி கவுன்சிலர்களின் வார்டுகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என்றார்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த தினேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

திருப்பூர் மாநகராட்சியினை முன்னோடி மாநகராக மாற்றுவேன். திருப்பூரின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிற பனியன் தொழிலுக்கும் தொழிலாளர்களுக்கும் திட்டங்களை பெற்றுத் தருவேன். 

மாநகராட்சி மக்களின் நலனுக்காக எந்த நேரமும் அயராது உழைப்பேன். கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி கவுன்சிலர்களின் வார்டுகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என்றார். தொடர்ந்து கவுன்சிலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 
Tags:    

Similar News