உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாணவி இறப்பை கண்டித்து மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் கடை வீதியில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் மதமாற்ற வலியுறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி இறப்பை கண்டித்து மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சதீஸ்வரன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவு துணைத் தலைவர் ஜெகன் குமார், மாவட்ட செயலாளர் கல்பனா, நகர தலைவர் குணமூர்த்தி, நகர பொதுச்செயலாளர் சாமிநாதன், நகர துணைத்தலைவர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.