உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
திருவள்ளூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் புதிய காலனியை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 37). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கன்னிகைபேர்-சென்னை நெடுஞ்சாலையில் தானாகுளம் கிராமத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.