உள்ளூர் செய்திகள்
கைது

திண்டிவனத்தில் கஞ்சா கடத்தி விற்ற 2 பேர் கைது

Published On 2022-01-27 10:45 GMT   |   Update On 2022-01-27 10:45 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கஞ்சா கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்:

திண்டிவனம் ரோசனை சந்தைமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரோசனை சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ்க்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், அருள்தாசு, தலைமை காவலர் வெற்றி, காவலர் தர்மன், ஆகியோர் சந்தை மேடு பகுதியில் சந்தேகத்துக்கிடமான 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் சென்னை நூங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த அஸ்வின் சென்னை ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான 2 பேரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் நடந்த விசாரணையில் விசாரித்ததில் அவர்கள் சென்னையில் இருந்து திண்டிவனம், செஞ்சி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News