உள்ளூர் செய்திகள்
காளியம்மன் கோவிலில் உண்டியல் கொள்ளை
மேலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
மேலூர்
மேலூர் நகர் நாயக்கர் தெருவில் அமைந்துள்ளது காளியம்மன் கோவில் உள்ளது. வருடாவருடம் இங்கு திருவிழா நடைபெற்று பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். விசேஷ நாட்களில் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் நேற்று இரவு பூஜைகள் முடித்து வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் கேட்டை உடைத்து முன்புற மண்டபத்தில் இருந்த உண்டியலை உடைத்தனர். பின்னர் அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
காலையில் கோவிலுக்கு சாமிகும்பிட வந்தவர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் மேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.