உள்ளூர் செய்திகள்
ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவிகளை தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், கலெக்டரிடம் வழங்கிய காட்சி.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவி-கலெக்டரிடம் சிவபத்மநாதன் வழங்கினார்

Published On 2022-01-25 09:17 GMT   |   Update On 2022-01-25 09:17 GMT
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவிகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், கலெக்டர் கோபாலசுந்தரராஜிடம் வழங்கினார்.
தென்காசி:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆக்சிஜன் அளவை கண்டறியும் 100 கருவிகள்  மற்றும் அதற்குரிய பேட்டரி உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜிடம் வழங்கினார்.

மேலும் கருத்தபிள்ளை யூருக்கு பகுதி நேர ரேஷன் கடை வேண்டிய கோரிக்கையையும், சங்கரன்கோவிலில் வசித்து வருகிற வீரக்கொடி வெள்ளாளர் சமூகத்திற்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே வைக்கப்பட்டு சாதி சான்றிதழ் வழங்கும் நிலையில் இருக்கிறது. அதனையும் துரிதப்படுத்த மனுக்களையும் வழங்கினார்.

நல்லூர் ஊராட்சி அரசு புறம்போக்கு நிலத்தில் இருக்கிற கருவை மரத்தை அகற்ற ஊராட்சி மன்றத் தலைவர் கொடுத்த மனுவையும், மாறாந்தையில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த 4 ஏக்கர் நிலத்தினை வழங்கப்பட்டதாக பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஆனால் தாசில்தார் 2 ஏக்கர் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்கள். 4ஏக்கர் நிலத்தை வழங்கிட வேண்டி ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் கொடுத்த மனுவினையும் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்.

Tags:    

Similar News