உள்ளூர் செய்திகள்
மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள்- டி.டி.வி. தினகரன் வாழ்த்து
உயிருக்கு நிகரான நம் தாய்த்தமிழை உயர்த்தி பிடிக்க தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
உயிருக்கு நிகரான நம் தாய்த்தமிழை உயர்த்தி பிடிக்க தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம்.
இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் வழியில், தமிழை இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும், திருக்குறளை தேசிய நூலாக்கவும், உழைத்திட மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளில் உறுதி ஏற்றிடுவோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.