உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-23 06:34 GMT   |   Update On 2022-01-23 06:34 GMT
திருப்பனந்தாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம்:

திருப்பனந்தாளில் கடைவீதியில் காட்சிப் பொருளாக உள்ள கழிவறையை 
சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும். பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.

அனைத்து தெருக்களிலும் உள்ள சாலைகளை செப்பனிட்டு புதிய 
தார்சாலை போட்டுத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 
ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட குழு ஜீவபாரதி சாமிகண்ணு, பாரதி, ஒன்றிய குழு சாமிநாதன், காசிநாதன், வெற்றிச்செல்வி, நடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News