உள்ளூர் செய்திகள்
மெய்யூர் அருகே மணல் குவித்து வைத்தவர்கள் மீது வழக்கு
மெய்யூர் அருகே மணல் குவித்து வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
பூண்டி ஒன்றியம், மெய்யூர் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதியதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு அனுமதியின்றி ஆற்று மணலை டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் குவித்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மெய்யூர் கிராம நிர்வாகி அதிசயகுமார் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.