உள்ளூர் செய்திகள்
நகைகள் திருட்டு

ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 26 பவுன் நகைகள் திருட்டு

Published On 2022-01-22 11:14 GMT   |   Update On 2022-01-22 11:14 GMT
மதுரையில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 26 பவுன் நகைகள் திருடப்பட்டன.
மதுரை


மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கசாமி. இவரது மனைவி முத்துமீனாள் (வயது 39). இவர் சம்பவத்தன்று ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மதுரைக்கு பஸ்சில் வீடு திரும்பினார். 

பஸ் நிலையத்தில் இருந்து முத்துமீனாள் ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார். வழியில் வாழைத்தோப்பில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று உள்ளார். 

அப்போது ஆட்டோ டிரைவரிடம் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றதாக தெரிகிறது. அதன் பிறகு  முத்துமீனாள் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் முத்துமீனாள் தனது உடமைகளை சோதித்து பார்த்தபோது பேக்கில் இருந்த 29 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமீனாள், இது தொடர்பாக கீரைத்துறை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News