உள்ளூர் செய்திகள்
ஸ்கேட்டிங் மூலம் கொரோனா விழிப்புணர்வு
ஸ்கேட்டிங் பேரணி கோவை ரோடு, கடைவீதி உள்ளிட்ட பல்லடத்தின் முக்கிய ரோடுகளின் வழியாக சென்றது.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளி மாணவர்கள் இணைந்து கொரோனா பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்லடத்தின் முக்கிய ரோடுகளில் ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த கொரோனா தொற்று ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியை பல்லடம் தாசில்தார் தேவராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஸ்கேட்டிங் பேரணி கோவை ரோடு, கடைவீதி உள்ளிட்ட பல்லடத்தின் முக்கிய ரோடுகளின் வழியாக சென்றது. இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள், ஸ்கேட்டிங் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.