உள்ளூர் செய்திகள்
வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட புதிய கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்பு
காங்கயத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளராக மாரியப்பன் பொறுப்பேற்று கொண்டார்.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவில் விற்பனைக்கூட கண்காணிப்பாளராக கடந்த 2ஆண்டுகள் பணியாற்றி வந்த ரா.மாரியப்பன் காங்கயம் விற்பனைக்கூடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பணிபுரிந்து வந்த சி.மகுடேஸ்வரன் வெள்ளக்கோவிலுக்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
புதிய கண்காணிப்பாளருக்கு சக அலுவலர்கள், விவசாயிகள், வணிகர்கள், கலாசு தொழிலாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதேப்போல் காங்கயத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளராக மாரியப்பன் பொறுப்பேற்று கொண்டார்.