search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனைக்கூடம்"

    • திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் வணிகத்துறை இயக்குநர் ‘திடீர்’ ஆய்வு நடத்தினார்.
    • நுகர்வோர்களிடம் குறைகள் கேட்டார்.

    மதுரை

    திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தின் மூலமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட வேளாண் விளை பொருட்களுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் பங்கேற்பின் மூலம் இ-நாம் திட்டத்தின் கீழ் அதிகபட்ச விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத னால் விவசாயிகள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் மற்றும் திருமங்கலம் உழவர் சந்தை ஆகியவற்றை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது இத்திட்டம் குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டதுடன் திருமங் கலம் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் கூடுதலாக ஒரு கிட்டங்கி அமைத்திட இட வசதி உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில் இ-நாம் திட்டத் தின் கீழ் பரிவர்த்தனைகளை அதிகரித்திட உரிய அறிவுரை வழங்கினார்.

    மேலும், திருமங்கலம் உழவர் சந்தையினை ஆய்வு செய்த இயக்குநர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய் ததுடன் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களிடம் சந்தை யின் அடிப்படை வசதிகள் மற்றும் செயல்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா எனவும் கேட்டறிந் தார்.

    ஆய்வின்போது வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கூடுதல் இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • ஏலத்தில் மொத்தம் 30 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா்.
    • விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.80 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.

    இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் 5,689 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 2,506 கிலோ. விலை கிலோ ரூ.18.25 முதல் ரூ.27.20 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.26.80.13 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 286 கிலோ. விலை கிலோ ரூ.60.90 முதல் ரூ.83.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.81.15.

    ஏலத்தில் மொத்தம் 30 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.86 ஆயிரம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளிடமிருந்து எந்தவித கட்டணமும் பெறப்படுவதில்லை.
    • வியாபாரிகளிடம் மட்டும் ஒரு சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வேளாண் வணிக உதவி வேளாண்ைம அலுவலர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குன்னத்தூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பாக புதியதாக கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 28.10.2022 முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நிலக்கடலை ஏலம் நடைபெற உள்ளது.

    எனவே நிலக்கடலை அறுவடை செய்து வரும் விவசாயிகள் நிலக்கடலையை உலர வைத்து காய்ந்த நிலக்கடலையை குன்னத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம். கொண்டுவரும் நிலக்கடலையை ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 350 மூட்டைகள் வரை இருப்பு வைத்துள்ளனர்.ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளிடமிருந்து எந்தவித கட்டணமும் பெறப்படுவதில்லை.

    வியாபாரிகளிடம் மட்டும் ஒரு சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது .தங்களுடைய நிலக்கடலைக்கு அதிக விலை கிடைக்க தரம் பிரிப்பது அவசியமாகிறது. நிலக்கடலை காய்கள் தரம் உள்ளதாக இருக்க அதில் உள்ள கல், மண், தூசி, கெட்டுப்போன காய்கள், சுருங்கிய முதிராத காய்கள் இவைகளை தனியாக பிரித்து விட வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட நிலக்கடலை காய்களை நல்ல கோணி பைகளில் போட்டு சிப்பமிட்டு எடுத்து வர வேண்டும்.ஏலத்தில் அதிக அளவிலான வியாபாரிகள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது நிலக்கடலைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு குன்னத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரஸ்வதியை 9894171854 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 14,272 தேங்காய்கள் வரத்து இருந்தன.
    • தேங்காய் கிலோ ரூ.20.75 முதல் ரூ.24.05 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 7.10 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 14,272 தேங்காய்கள் வரத்து இருந்தன.

    இவற்றின் எடை 5,706 கிலோ.தேங்காய் கிலோ ரூ.20.75 முதல் ரூ.24.05 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.45.81 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,987 கிலோ. கொப்பரை கிலோ ரூ.68.70 முதல் ரூ.81.70 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.77.35.ஏலத்தில் மொத்தம் 109 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா்.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.2.65 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • 22 விவசாயிகள் 218 மூட்டைகளில் 10,260 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • விற்பனைத் தொகை ரூ. 6.81 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் தெரிவித்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 6.81 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது.

    இந்த வார ஏலத்துக்கு வேடசந்தூா், பூசாரிபட்டி, கருங்குளம், மாா்க்கம்பட்டி, தாழையூத்து, புளியம்பட்டி உள்ளிட்ட ஊா்களில் இருந்து 22 விவசாயிகள் 218 மூட்டைகளில் 10,260 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். ஈரோடு, கஸ்பாபேட்டை, நடுப்பாளையம், முத்தூா், காங்கயம் ஆகிய பகுதிகளில் இருந்து 6 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.56.91 முதல் ரூ. 68.36 வரை விற்பனையானது.

    சராசரி விலை ரூ.62.09. கடந்த வார சராசரி விலை ரூ. 65.69. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 6.81 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்

    • ரூ. 10 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது.
    • 290 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.

    வெள்ளக்கோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 10 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு களத்தூா், தொடாவூா், எரியோடு, பட்டுத்துறை, டி. கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 22 விவசாயிகள் தங்களுடைய 290 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 14,124 கிலோ. ஈரோடு, முத்தூா், காங்கயத்தில் இருந்து 3 வணிகா்கள் விதைகளை வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.62.75 முதல் ரூ. 77.19 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 73.89. கடந்த வார சராசரி விலை ரூ. 70.79. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 10.06 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    ×