உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்
டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் தற்போது குப்பைகள் குவிந்து கிடப்பது நோய் பரவுவதற்கு மேலும் வழிவகுத்து விடும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக உஷா தியேட்டர் அருகே பி.கே.ஆர். காலனியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் தற்போது குப்பைகள் குவிந்து கிடப்பது நோய் பரவுவதற்கு மேலும் வழிவகுத்து விடும். எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.