உள்ளூர் செய்திகள்
திருவாரூரில் போலீசாரின் பழுதான வாகனங்கள் ஏலம்
திருவாரூரில் பயன்பாடில்லாத காவல்துறை வாகனங்கள் ரூ.12.5 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட காவல்துறையில் காவல் பணிக்காக இயங்கிவந்த வாகனங்களில் பயன் பாடில்லாமல் கழிவினம் செய்யப்பட்ட இருசக்கர மற்றும் இலகுரக ஜீப் வாகனங்கள் என மொத்தம் 60 வாகனங்களுக்கான பொது ஏலம் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
எஸ்.பி விஜயகுமார் தலைமையில் ஏ.டி.எஸ்.பி அன்பழகன் ஏலத்தினை நடத்தினார். இதில் வாகனங்களை பொது ஏலம் எடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து எஸ்.பி. விஜயகுமார் கூறுகையில், திருவாரூர் மாவட்ட போலீஸ் துறையில் 10 ஆண்டு காலத்திற்கு மேல் இயங்கி வந்த இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் பயன்பாடு இல்லாமல் கழிவினம் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டது.
அதன்படி 38 இருசக்கர வாகனங்கள், 12 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 50 வாகனங்கள் ரூ 12 லட்சத்து 54 ஆயிரத்து 390-க்கு ஏலம் விடப்பட்டது.
இந்த தொகை அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது என கூறினார்.