உள்ளூர் செய்திகள்
எண்ணூரில் கடலில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் மாயம்
கடலில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் மாயமான சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் மாணவனை தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் நிர்மல். இவருடைய மகன் தனுஷ் (வயது 18). இவர், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.நேற்று தனுஷ், தன்னுடைய தம்பி தமிழ்ச்செல்வன் (14), நண்பர்கள் வெங்கடேசன் (19), ருத்ரன் (13), விக்னேஷ் (16), அவருடைய தாயார் செல்வி (35) ஆகியோருடன் எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரைக்கு வந்து கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலையில் சிக்கிய தனுஷ் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சகநண்பர்கள், வெளியே ஓடி வந்து தனுசை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். உடனடியாக அருகில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், கடலில் மூழ்கிய மாணவன் தனுசை தேடி வருகின்றனர்.
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் நிர்மல். இவருடைய மகன் தனுஷ் (வயது 18). இவர், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.நேற்று தனுஷ், தன்னுடைய தம்பி தமிழ்ச்செல்வன் (14), நண்பர்கள் வெங்கடேசன் (19), ருத்ரன் (13), விக்னேஷ் (16), அவருடைய தாயார் செல்வி (35) ஆகியோருடன் எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரைக்கு வந்து கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலையில் சிக்கிய தனுஷ் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சகநண்பர்கள், வெளியே ஓடி வந்து தனுசை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். உடனடியாக அருகில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், கடலில் மூழ்கிய மாணவன் தனுசை தேடி வருகின்றனர்.