உள்ளூர் செய்திகள்
சாலை விபத்து

திருமங்கலம் அருகே சாலை விபத்துகளில் 2 பேர் பலி

Published On 2022-01-15 10:58 GMT   |   Update On 2022-01-15 10:58 GMT
திருமங்கலம் அருகே நடந்த இருவேறு விபத்துகளில் லாரி டிரைவர் மற்றும் பெண் பலியானார்.
திருமங்கலம்

கள்ளிக்குடி அருகே உள்ள சோளம்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது 45) பெயிண்டர். இவரது மனைவி வீரலட்சுமி (38). இருவரும் திருமங்கலம் வந்து சீர்வரிசைக்கான அண்டாவை வாங்கி கொண்டு டூவிலரில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். 

மதுரை விருதுநகர் 4 வழி சாலையில் சிவரக்கோட்டை அருகே சென்றபோது அண்டா கீழே விழ முயலவே வீரலட்சுமி அதனை பிடிக்க முயன்றார். அப்போது வண்டியில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். 

மதுரை அரசுமருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப் பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 திருமங்கலத்தை அடுத்துள்ள சித்தாலையை சேர்ந்தவர் ராஜ்குமார் (28). கப்பலூர் ஐ.ஓ.சி.யில் லாரி டிரைவராக பணிபுரிந்தார்.  

உரப்பனூர் கிராமத்தில் இவரது உறவினர் இறப்புக்கு சென்றுவிட்டு மீண்டும் ராஜ்குமார் டூவிலரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 

சித்தாலை அருகே சென்ற போது முன்னால் நின்று கொண்டிருந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். 

இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News