உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

2 மனைவிகளும் பிரிந்து சென்றதால் ஊர்காவல்படை வீரர் தற்கொலை

Published On 2022-01-10 11:17 GMT   |   Update On 2022-01-10 11:17 GMT
நெல்லையில் 2 மனைவிகளும் பிரிந்து சென்றதால் மனமுடைந்த ஊர்க்காவல் படை வீரர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

நெல்லை தச்சநல்லூர் உலகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 35). ஊர்க்காவல்படை வீரர்.

இவரது முதல் மனைவி பிரிந்து சென்றதால், சமீபத்தில் இவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தனர்.

சில மாதங்களிலேயே இரண்டாவது மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். 

இந்த நிலையில் அர்ஜுனனை அந்த பகுதியில் உள்ள சிலர் கேலி& கிண்டல் செய்துள்ளனர். ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த அவரது உறவினரான மாரியப்பன் (23) என்பவர் நேற்று அர்ஜுனனை அதிகமாக கேலி செய்ததாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த அர்ஜுனன் நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து அர்ஜுனன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி தற்கொலைக்கு காரணமாக கேலி செய்த மாரியப்பன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News