உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்:
நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு முறையை கைவிட வேண்டும்,
டெல்டா மாவட்டங்களில் திறக்கப்பட்ட கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்,
சாக்குகள் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை எஸ்.ஆர்.எம். அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் கூட்டு இயக்க மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.