உள்ளூர் செய்திகள்
ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல் - வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
நியாசை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனர்வனிதா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரம், திருமுருகன்பூண்டி பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதாக அந்த மாணவிக்கு கேரள மாநில இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவி கொடுத்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாக கேரள மாநிலம், கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த நியாஷ் ( வயது 23) என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்
அவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பெண்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆகவே, நியாசை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனர்வனிதா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நியாசிடம் போலீசார் நேரில்வழங்கினர்.