உள்ளூர் செய்திகள்
ஜோஸ்வா சிவகுமார்

மின் வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி- வாலிபர் கைது

Published On 2022-01-09 07:58 GMT   |   Update On 2022-01-09 07:58 GMT
சிவக்குமாரை போலீசார் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் பகுதியை சேர்ந்த கண்ணன் மகள் ஜெயப்பிரியா(வயது 35). இவருக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்லடம் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ஜோஸ்வா என்கிற சிவகுமார்(37) கடந்த 2017ல் ரூ.1 1/2 லட்சம் பணம் வாங்கியதாகவும் இதுகுறித்து பலமுறை கேட்ட போது இப்போது ஆகிவிடும், பிறகு ஆகிவிடும் என ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது 

இந்தநிலையில் ஜெயப் பிரியா அவரது அண்ணன் சந்திரசேகரிடம் இதுபற்றி கூறியுள்ளார். அவர் பணம் வாங்கியது குறித்து சிவக்குமாரிடம் கேட்டபோது வேலை சீக்கிரம் வாங்கித் தருகிறேன் அல்லது பணத்தை திருப்பித் தருகிறேன் என கூறியதாக கூறப்படுகிறது. இப்படிப்பலமுறை தொடர்ந்து தவணை சொல்லவே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து பல்லடம் போலீசில் சந்திரசேகர் புகார் அளித்தார்.

இதையடுத்து மோசடி வழக்கு பதிவு செய்த பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி ஜோஸ்வா என்கிற சிவக்குமாரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News