உள்ளூர் செய்திகள்
ராதாபுரம் வட்டாரத்தில் 1,825 பேருக்கு தடுப்பூசி
ராதாபுரம் வட்டாரத்தில் நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 1,825 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திசையன்விளை:
ராதாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மரியாள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி மற்றும் சுகாதாரத்துறையினர் தலைமையில் வட்டாரம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ராதாபுரம், உவரி, நவ்வலடி, திசையன்விளை உள்பட 59 இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது.
இதில் மொத்தம் 1,825 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 652 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.