உள்ளூர் செய்திகள்
நீரில் மூழ்கி பலி

ஆலங்குளம் அருகே கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

Published On 2022-01-08 09:34 GMT   |   Update On 2022-01-08 09:34 GMT
ஆலங்குளம் அருகே கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள அகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவரது மகன் தங்கராஜ்(வயது 12).

இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சிறுவன் தங்கராஜ், தனது வீட்டுக்கு பின்புறம் செல்லும் நெட்டூர் கால்வாய்க்கு குளிக்க சென்றுள்ளான்.

நீண்ட நேரமாகியும் அவன் வீட்டுக்கு திரும்பி வராததால், அவனது பெற்றோர் கால்வாய்க்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தங்கராஜ் தண்ணீரில் பிணமாக மிதந்துள்ளான்.

உடனே அவனது பெற்றோர் தங்கராஜ் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவனது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுவன் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News