உள்ளூர் செய்திகள்
கலைவாணர் அரங்கம்

2 நாட்கள் நடைபெறும் தமிழக சட்டசபை கூட்டம்

Published On 2022-01-05 06:58 GMT   |   Update On 2022-01-05 06:58 GMT
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 7ஆம் தேதி வரை 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.55 மணிக்கு சட்டசபை வந்தார்.

அவர் வருவதற்கு முன்பாகவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் வந்து அமர்ந்து இருந்தனர். சரியாக 10 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். அவரது உரைக்குப் பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசினார்.

இதையடுத்து சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி ஆலோசனை நடத்தியது.

இதில், நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் மட்டும் சட்டசபை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்றும் நாளை மறுநாள் முதலமைச்சர் பதிலுரை அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News