உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி
நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் யோகா பயிற்சிகளை செய்தனர்.
திருப்பூர்:
உடல்நலத்தை பேணி காக்க யோகாசனம் செய்ய வேண்டுமென தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் யோகா பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு விதமான யோகா பயிற்சிகளை அளித்தனர். மாணவர்கள் ஆர்வமுடன் யோகா பயிற்சிகளை செய்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்றனர்.