உள்ளூர் செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் மேலும் 1,489 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2022-01-01 14:11 GMT   |   Update On 2022-01-01 14:11 GMT
தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,489 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 49 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது. இன்று 8 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 682 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2920 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 97 பேர்  சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர். 27 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News