உள்ளூர் செய்திகள்
ஆர்வமுடன் நடனமாடிய குழந்தைகள்.

பொதுமக்களை கவர்ந்த குழந்தைகளின் கலைநிகழ்ச்சி

Published On 2021-12-27 10:11 GMT   |   Update On 2021-12-27 10:11 GMT
குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
திருப்பூர்:

திருப்பூர் கோர்ட்டு வீதி டி.இ.எல்.சி., தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 25-ந்தேதி சிறப்பு பிராரத்தனைகள் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

இந்தநிலையில் நேற்றிரவு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் பொதுமக்கள் பலர் பங்கேற்று கலை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். பங்கு தந்தைகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News