உள்ளூர் செய்திகள்
தற்கொலை

பஞ்சப்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

Published On 2021-12-26 08:12 GMT   |   Update On 2021-12-26 08:14 GMT
பஞ்சப்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:

பஞ்சப்பள்ளியை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (வயது31). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த அருண்பாண்டியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பஞ்சப்பள்ளி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News