உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே ஆபத்தான குழியால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அபாய குழியை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தாம்பாளையத்திலிருந்து சின்னக்கரை செல்லும் ரோட்டில் திடீர் குழி ஏற்பட்டுள்ளது. இந்த சாலை பல்லடம் - திருப்பூரை இணைக்கும் முக்கியச் சாலை என்பதால் போக்குவரத்து அதிகமாக இருக்கும் .
மேலும் இந்தப் பகுதியில் சாய ஆலைகள் உள்ளன. இவற்றுக்கு வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் இந்த குழி பெரிதாகி விபத்துக்கள் நேரிடும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அபாய குழியை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.