உள்ளூர் செய்திகள்
களக்காட்டில் கட்டிட தொழிலாளி தற்கொலை
களக்காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு கோவில்பத்து ஆற்றாங்கரை தெருவை சேர்ந்தவர் மாசானம் மகன் பாலமுருகன் (23). கட்டிட தொழிலாளி. திருமணமாகாத இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக அவர் நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்தது. சம்பவத்தன்று மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்த பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உறவினர்கள் அவரை மீட்டு, களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு கோவில்பத்து ஆற்றாங்கரை தெருவை சேர்ந்தவர் மாசானம் மகன் பாலமுருகன் (23). கட்டிட தொழிலாளி. திருமணமாகாத இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக அவர் நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்தது. சம்பவத்தன்று மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்த பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உறவினர்கள் அவரை மீட்டு, களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.