உள்ளூர் செய்திகள்
மனு கொடுக்க வந்த பொடாரம்பாளையம், செட்டிப்பாளையம் பகுதி பொதுமக்கள்.

பாலித்தீன் மறுசுழற்சி ஆலையை மூட கோரிக்கை

Published On 2021-12-20 10:24 GMT   |   Update On 2021-12-20 10:24 GMT
வேஸ்ட் குடோன் நடத்துவதாக கூறிக்கொண்டு பாலித்தீன் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் செட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். 

அதில், எங்களுக்கு திருப்பூர் பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ்  வழங்கப்பட்டுள்ளது. 

அதில் 15 நாட்களுக்குள் நாங்கள் குடியிருக்கும் இடத்தை காலி செய்ய வேண்டும். கட்டிடங்கள், வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அப்புறப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

எனவே இதுகுறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். 

திருப்பூர் பொடாரம்பாளையம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில்,எங்கள் பகுதியில் வேஸ்ட் குடோன் நடத்துவதாக கூறிக்கொண்டு பாலித்தீன் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. எனவே அந்த ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

குடிமங்கலம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், 

தங்கள் பகுதியில் கோழிப்பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.  
Tags:    

Similar News