உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு

Published On 2021-12-20 08:06 GMT   |   Update On 2021-12-20 08:06 GMT
புகார்களை கவனித்து உரிய அரசுத்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்க தனி பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு,  நுகர்வோர் குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. 

இந்நிலையில் பொதுமக்கள் தங்களது குறைகளை விரைவாக தெரிவித்து தீர்வு பெற உதவியாக புதிய ‘வாட்ஸ் ஆப்’ எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் 97000 41114 என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்களில் புகார் தெரிவிக்கலாம். புகார்களை கவனித்து உரிய அரசுத்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்க தனி பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News