உள்ளூர் செய்திகள்
தற்கொலை

சேரன்மகாதேவி ஆற்றங்கரையோரம் மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2021-12-16 11:27 GMT   |   Update On 2021-12-16 11:27 GMT
சேரன்மகாதேவி ஆற்றங்கரையோரம் வாலிபர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள அச்சம்பட்டியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 29). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயபாஸ்கர் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை சேரன்மகாதேவி ஆற்றுப்பாலம் அருகே ஆற்றை ஒட்டி உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயபாஸ்கர் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News