உள்ளூர் செய்திகள்
குற்றாலம் அருவி

குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது

Published On 2021-12-16 09:41 GMT   |   Update On 2021-12-16 09:41 GMT
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது.
தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் அடித்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.

நேற்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. சுமார் 8 மாதங்களுக்கு பிறகு வருகிற 20-ந் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அரசு அனுமதித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை பெய்தபோது அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்கரைகளில் தரைத்தளம் மற்றும் தடுப்பு கம்பிகள் சேதமடைந்தன. அவை சரிசெய்யப்பட்டு பணி முடியும் தருவாயில் உள்ளது.


Tags:    

Similar News