உள்ளூர் செய்திகள்
தற்கொலை

புதியம்புத்தூர் அருகே 3 குழந்தைகளின் தாய் தற்கொலை

Published On 2021-12-15 10:35 GMT   |   Update On 2021-12-15 10:35 GMT
புதியம்புத்தூர் அருகே 3 குழந்தைகளின் தாய் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதியம்புத்தூர்:

ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சங்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தீபராஜ். இவரது மனைவி ஐஸ்வர்யா(வயது 26). கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இதில் மகன் மூளை வளர்ச்சி குன்றி, கை மற்றும் கால்கள் செயல்படாத நிலையில் இருந்துள்ளார். இதனால் ஐஸ்வர்யா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை அவர் குடித்துள்ளார்.

உடனே அவரது கணவர், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News