உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திருப்பூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் அம்பேத்கர் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தினர்.
இதனை கண்டித்தும், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.