உள்ளூர் செய்திகள்
திருப்பூர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கின
திருப்பூர் அலுவலகத்தில் மும்பையில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் அப்பாச்சி நகரில் தனியார் நிறுவனத்தின் பதிவு அலுவலகம் உள்ளது.
இந்நிறுவனம் நலிவடைந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. ஒரு நிர்வாக இயக்குநர் மற்றும் 10 இயக்குனர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் இந்நிறுவனத்தின் மும்பையை சேர்ந்த இயக்குனர்கள் சிலர் மீது மும்பை வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்நிறுவனத்தின் பதிவு அலுவலகமான திருப்பூர் அலுவலகத்தில் நேற்று மும்பையில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.